மணிவாசகப் பெருமான் பாடிச் சென்ற திருவாசகம், தித்திக்கும் தேன் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை உணர்ந்து படிப்பவர்கள், தில்லையம்பல கூத்தன் திருவடிகளை அடைவது திண்ணம்.
திருவாசகத்தில் மனதைப் பொருத்தி, உணர முயன்று கொண்டிருக்கிறேன்.
'மனதைப் பொருத்தி'---என்பதில் தான் எனக்கு சிரமமே! சாமான்ய மனிதர்கள் பலரின் அனுபவமும், இதுவாகத் தானிருக்கும் என்றும் நினைக்கிறேன்.
சாமான்யர்களாகிய, எங்களின் பார்வையில் திருவாசக விளக்கமும் , தேனைப் போன்ற அதன் தித்திக்கும் சுவையை உணர்வதற்குமான , ஒரு சிறு முயற்சியே இந்த வலைத் தளம்.
என் சிற்றறிவிற்கு எட்டிய வரை, பொருள் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
விளக்கங்களைப் படிப்பவர்கள், என் தவறுகளைத் திருத்தினால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
என்னுடைய இந்த சிறு முயற்சியை, மணிவாசகப் பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
தில்லையம்பலனின் அருளையும் , மணிவாசகப் பெருமானின், அருளையும் மனதார வேண்டிக் கொண்டு, என் முயற்சியைத் தொடர்கிறேன்.
ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய !
No comments:
Post a Comment