திருவாசகத்தை உணரும் முயற்சி !



மணிவாசகப் பெருமான் பாடிச் சென்ற  திருவாசகம்,  தித்திக்கும் தேன் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை உணர்ந்து படிப்பவர்கள்,  தில்லையம்பல கூத்தன் திருவடிகளை அடைவது திண்ணம்.

திருவாசகத்தில் மனதைப்  பொருத்தி,  உணர முயன்று கொண்டிருக்கிறேன்.

'மனதைப் பொருத்தி'---என்பதில் தான் எனக்கு சிரமமே! சாமான்ய  மனிதர்கள் பலரின் அனுபவமும்,  இதுவாகத் தானிருக்கும் என்றும் நினைக்கிறேன்.

சாமான்யர்களாகிய, எங்களின்  பார்வையில் திருவாசக விளக்கமும்  ,   தேனைப் போன்ற  அதன் தித்திக்கும்  சுவையை   உணர்வதற்குமான , ஒரு சிறு முயற்சியே இந்த வலைத் தளம்.

என் சிற்றறிவிற்கு எட்டிய வரை, பொருள் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
விளக்கங்களைப் படிப்பவர்கள், என் தவறுகளைத் திருத்தினால்  மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

என்னுடைய  இந்த சிறு முயற்சியை, மணிவாசகப் பெருமான் திருவடிகளில்  சமர்ப்பிக்கிறேன்.

தில்லையம்பலனின் அருளையும் , மணிவாசகப் பெருமானின், அருளையும் மனதார வேண்டிக் கொண்டு,  என் முயற்சியைத்  தொடர்கிறேன்.


ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய !

No comments:

Post a Comment